பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

மாதிர முழுவது மடா மடா வென
போதென வுதிருடு பொலீர் பொலீ ரென
வேது படவு மிடி திடீர் திடீ ரென வருகை நாளில்

மேதினி கலறைகள் படீர் படீரென
பாதகர் வயிறகம் பகீர் பகீரென
நீதியர் முகமுழு நிலா நிலாவென நகையராக

கோதுறு நரகெரி குபீர் குபீரென
மீதல சுகவறை மினா முனாவுற
எதை யெனையுமுள மெணாதிரேல் ஒளிர் திருமணாளா

 

48
'ஜயஜயகோ குலபால' என்ற மெட்டு
பைரவி -- நபகம்.

பல்லவி

தினகரதீ விரகோடிதிகம்பரமாதிர மூடி
திரளாய் வானோர் கூடிதேவ மாமணமோடி

அனுபல்லவி


தேவரடியவர் சகிதம் தீவிய கா கள நாதம்
தேவசுதன் திரு மாரதம் தேஜோமயமே வாரிதம் (தி)

சரணம்


வானே மீன் உகுபோதே வையநகம் பகமீதே
ஈனேகயவர் கோதே ஏகாங்கி புக வேதே (தி)

புனைமங்களாகரமே புது நிலமுங் ககனமுமே
வினைமுதிர் சிங்காசனமே விகசிதம் ஆளுகை சதமே (தி)

 

49
நடுத்தீர்ப்பு
ஏசு வலது பக்கத்தார்க்குச் சொல்வது.

'சுகுண ழலே' என்ற மெட்டு.
பல்லவி
வலமுக மெய்ப் பக்தரின்றே வந்துற வரபோகம்

7