பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நவீன தெனாலிராமன் "கழுதைக்குத் தெரியும் கர்ப்பூர வாசனை' என்றார். 'இனிமேல் அப்படிச் சொல்லாதீங்க அப்பா! நான் குட்டிச்சுவர் என்றால் பொறுத்துக் கொள்வேன்; நீங்க கழுதையாகி விடுவிங்க' என்று புத்தி சாலித்தனமாகப் பேசினான். அதிலிருந்து அவனை யோசித்துதான் திட்டுவார் அட முண்டம்!' என்றார். தனக்கு அறிவு இருக்கிறது என்ற காட்டுவது போல அவர் முன் வந்து தலைகாட்டினான். 'நீ தறுதலை' என்றார்; அவன் 'மறுதலை ஒன்றும் சொல்லவில்லை. எதிர்விட்டில் ஒரே கூட்டமாக இருந்தது. 'ஏன்'பா இவ்வளவு கூட்டம்?' என்று கேட்டான். 'முதல் தேதி ஆயிற்றே; கடன்காரர்கள் வந்திருக் கிறார்கள்' என்றார். அதே வீட்டில் சில நாட்கள் கழித்துக் கூட்டம் சேர்ந் திருந்தது. "ஏன்'பா இன்று முதல் தேதியா?' என்று கேட் டான். "அவருக்குக் கடைசி தேதி' என்று விளக்கம் தந்தார். இவன் ஒரு கலியாணவீட்டுக்குப் போயிருந்தான்; இவனுக்கு ரசம் பரிமாறப் பட்டது. 'கொஞ்சம் கையைப் பிடியுங்க” மாறிய இளமங்கை ஒருத்தி. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாமல், சட் டென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான். என்றாள் ரசம்பரி அவள் குய்யோ முறையோ என்று கத்தினாள். 'கையைப் பிடிச்சிட்டானே' என்று கத்தினாள்.