பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

觅04 சில்ேபைப் பாடல்கள்

சிவபெருமானுக்கும் இட்டிலிக்கும் ஆட்டியபின் ஆவியிலே

பக்குவங்கண் டங்கெடுக்கும் ஈட்டால் பொடிவெண்மை

ஏய்வுறலால்-போட்டஇலை மேலுறலால் சாம்பாரில்

மேவியின்பும் தந்திடலால் கோலுமரன் இட்டிலியாக் கொள். சிவபெருமானுக்கு ஆட்டியபின் - உயிர் க ைள ப் பிறக்கச் செய்து அலைத்த பிறகு. ஆவியிலே பக்குவம் கண்டு-அவ்வுயிர்களின் பக்குவத்தை அறிந்து. அங்கு எடுக்கும் ஈட்டால்-அப்போது மேற்கதிக்கு எடுத்துச் சொல்லும் பெருமையினால், பொடி வெண்மை ஏய்வுற லால்-திருநீற்றினால் வெண்ணிறத்தைப் பெறுதலால். போட்ட இலை மேல் உறலால்-அன்பர்கள் அருச்சித்த பத்திரங்கள். தன்மேல் இருப்பதனால், சாம் பாரின் மேவிமக்கள் இறந்துபடும் நிலவுலகத்தில் எழுந்தருளி. இன்பம் தந்திடலால்-அன்பர்களுக்கு இன்பத்தை வழங்குவதால். கோலும் அரன்-அலங்காரம் செய்யும் சிவபெருமான்.

இட்டிலிக்கு ஆட்டியபின்-மாவை ஆட்டிய பிறகு. ஆவியிலே பக்குவம் கண்டு அங்கு எடுக்கும் ஈட்டால்-ஆவி யிலே வேக வைத்து வெந்த பக்குவத்தை அறிந்து அப்போது எடுக்கும் ஈட்டால் (இட்டிலியை ஒருமுறை எடுத்தால் ஓர் ஈடு என்று சொல்வது வழக்கம்). பொடி வெண்மை ஏய்வுற லால்-மிளகாய்ப் பொடியையும் வெள்ளை நிறத்தையும் அடைதலால், போட்ட இலைமேல் உறலால்-உண்ணுவதற் காகப் போட்ட் இலையின்மேல் இருத்தலால். சாம்பாரில் மேவி இன்பம் தந்திடலால்-சாம்பாரிலே சேர்ந்து இனிய

சுவையாகிய இன்பத்தைத் தருவதால். -

- இந்தப் பாடல் இலங்கைக்கு அன்பர் திரு ந. ரா. முருக வேளுடன் சென்றிருந்தபோது (21-4-62) பாடியது. -