106 - வெறிவிலக்குத்துறைப் பாடல்கள்
இம்மை - அம்மை நம்மைப் பணிகொண்டு வேட்டிச்
சுரத்தமர் நாதர்வினை வெம்மைக் கொருமருக் தானவர்
தம் சீர் விளம்பலர்போல் சும்மைப் படவெறி யாடின் இக்
காமத் துயர்படும் என் - றிம்மைக்குக் கேடுகுழ்ந் தாள்.அம்மைக்
கென்கொல் இயம்புவதே. வேட்டீச்சுரம்-திருவேட்டீசுவரர் கோயில். வினை வெம்மைக்கு-வினைகளால் உண்டான தாபங்களுக்கு. விளம்பலர் போல்-சொல்லாத அஞ்ஞானிகளைப் போல. சும்மைப்பட-ஆரவாரம் உண்டாக. வெறி ஆடின்-வெறி யாட்டு எடுத்தால். இக் காமத்துயர் படும் என்று-தலைவி கொண்ட இந்தக் காமமாகிய துயரம் போகும் என்று எண்ணி. இ மைக்கு-இந்த ஆட்டுக்கு. கேடு சூழ்ந்தாள்அழிவ்ைத் தேடினாள். அம்மைக்கு-அத்தகைய தாய்க்கு. ம்ை-ஆடு. -
ஈற்றடி, இகலோக வாழ்க்கைக்கு அழிவைத் தேடி னாள்; பரலோக வாழ்க்கைக்கு என்ன கிடைக்கும் என்று சொல்வது? என்று மற்றொரு பொருள் தொனிக்க நின்றது. இம்மை-இகவாழ்வு, மறுமை-மறுஉலக வாழ்வு.
அந்தகர்-அந்தகர் பந்தம் அறப்பிற விப்பெரு வாரியிற் பாடுறுவார் வந்தணு கிப்பணி வார் எனின்
இன்பம் வழங்குபிரான் நுங்தல் இலாச்சுடர் வேட்டீச் சுரத்திவள் நோய்அறியா தந்தக ரைக்கொல எண்ணின
ரேஇவர் அந்தகரே.