பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அம்மானைப் பாடல்கள்

அஞ்சக்கரின் மாதேவ னுந்துளவ மாலும் ஒருவரென வேதாந்தம் பேசி விளக்கும்ே அம்மானை, வேதாந்தம் பேசி விளக்குமே ஆமாயின் ஆதாரம் ஏதும் அறைவதுண்டோ அம்மானை? அஞ்சக் கரனென்ப தாதாரம் அம்மானை! . துளவமால்-துழாய் மாலையை அணிந்த திருமால், வேதாந்தம் உபநிடதம். அஞ்சக்கரன் என்று இருவரையும். சால்வதே ஆதாரம் என்றபடி அஞ்சக்கரன்-அஞ்சு. அக்கரன் (பஞ்சாட்சரத்தின் பொருளாக உள்ள சிவ பெருமான்), அம் சக்கரன் (அழகிய சக்கராயுதத்தை, உடைய திருமால்) என்று இருவருக்கும் பொருந்துவது: காண்க. - . -

அன்னம் காணார் திருத்தமுறு மாமயிலைச்

ੋਂ கபாலியார் . உருத்துவரு கஞ்சமுதாய்

உண்டனர்காண் அம்மானை: உருத்துவருகஞ்சமுதாய்

உண்டனரே. ஆமாயின், அருத்தும் உணவேதும்

ஆர்ந்திலரோ அம்மானை? அன்னங்கா னார்என்

றறைகுவரே அம்மானை. - திருத்தம்-செப்பம்; தீர்த்தமும் ஆம். உருத்துவருகோபித்து வந்த நஞ்சு அமுதாய் உண்டனர்-ஆலகாலவிஷத்தை உணவாக உண்டார். அருத்தும்-உண்ணச் செய்யும். ஆர்ந்திலரோ-உண்ணவில்லையோ. அன்னம் காண்ார்-சோற்றைக் காணாத பட்டினி உடையார் என்பது தொனி: அன்னமாக உருவெடுத்த பிரமனால் காண்ப் படாதவர் என்பது இயல்பான பொருள். . . . .