பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

இலையில் உட்கர்தல்

காங்கேயநல்லூரில் முருகன் திருக்கோயிலுக்கு மிகச் சிறப்பாகக் கும்பாபிஷேகம் செய்தார் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். அவருடைய சொந்த ஊர் அது. பெரிய கூட்டம் வந்திருந்தது. இ வரை ச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார். திறந்த வெளியில் கொட்டகை போட்டு அங்கே உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். பூமியை நிரவித் தண்ணீர் தெளித்துத் திமிசுக் கட்டை போட்டிருந் தார்கள். அங்கே இலை போட்டார்கள். கீழே ஈரமாக இருந்தது. அத்தனை பேருக்கும் பலகையோ, பாயோ போட முடியுமா? இலை மலையாக வந்து குவிந்திருந்தது. இலையையே ஆசனமாகப் போடுங்கள். உட்கார்ந்து சாப் பி டட் டு ம் என்றார் வாரியார். அப்படியே போட்டார்கள். .

இவரை உண்ண அழைத்தார்கள். எவ்வளவோ இடங்: களில் என்னைச் சாப்பிட அழைத்ததுண்டு. அங்கெல்லாம். அழைத்தவர்கள் சொன்னபடி கேட்கவில்லை. இப்போது தான் நீங்கள் சொன்னபடி கேட்கப் போகிறேன்' என்றார் இவர். 'என்ன அது?' என்று ஒர் அன்பர் கேட்டார். "எங்கே என்னைச் சாப்பிட அழைத்தாலும் இலையில் உட்காரலாம், வாருங்கள் என்று அழைப்பார்கள். நான் இலைக்குப் பக்கத்தில்தான் உட்காருவேன். ஆனால் இங்கே நீங்கள் சொன்னபடி இலையிலேயே உட்காரப் போகிறேன்' என்றார் இவர். ' . . . . . . . .

ஆண்டு நிறைவு

நண்பர் ஒருவருடைய குழந்தைக்கு ஆண்டு நிறைவு. நடக்க இருந்தது. குழந்தை அவருடைய ஊரில் இருந்தது. அங்கேயே ஆண்டு நிறைவு நடக்க ஏற்பாடாகி இருந்தது. அதற்குத் தம் தம்பியையும் அழைத்துக் கொண்டு போக, வேண்டும் என்று எண்ணினார். தம்பிக்கு லீவு கிடைக்க