பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் x . 69*

எங்கே காண முடியாதோ என்று கவலைப்பட்டேன். நல்ல வேளை! இருந்தார். என் வயிற்றில் பாலை வார்த்தார்’ என்று கூறி மகிழ்ந்தார்.

கலையமேகள்

தினமணி - கதிரில் அன்பர்கள் இவரைக் கேட்ட கேள்விகளுக்குரிய விடைகளை எழுதி வெளியிட்டார். ஓர் அன்பர், 'க ைல ம க ள் நேரில் பிரத்தியட்சமானால் அவளுடன் சிலேடையாகச் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள்?' என்று கேட்டிருந்தார். இவர், கலையா மகளே, என்னிடம் கலையா மகளாய் இரு என்பேன்" என்றார். - . * .

(கலையாமகள்-கலை ஆம் மகள், கலையாத மகள்.)

இப்பொழுதே இடம்

திருவல்லிக்கேணியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மணமகனுக்கு வலப்பக்கம் மணமகள் அமர்ந்திருந்தாள், ! பொரியிடும்போது புரோகிதர் பெண்ணை மணமகனுக்கு இடப்பக்கமாக வந்து அமரச் சொன்னார். அவள் அமர வாகாக மணமகன் சற்றே நகர்ந்தான். இவர், "இப்போதே இடம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்' என்றார்.

பூரி

மாலையில் பல்காரம் பண்ணுகிறவர் இவர் வெளி யூருக்குச் சென்றிருந்தபோது தங்கியிருந்த வீட்டு நண்பர், 'உங்களுக்கு மாலையில் என்ன பண்ணச் சொல்லலாம்? பூரி பிடிக்குமா?" என்று கேட்டார். இவர், "என் பேரை நினைத்தால் தெரிந்து கொள்ளலாமே!” என்றார். என்ன சொல்கிறீர்கள்?' என்று நண்பர் இவரை நிமிர்ந்து