பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 8 g .

பிள்ளை. சில காலம் கி. வா. ஜ. தலைவராக இருந்தார். அமரர் க. சோமசுந்தரம் எப்போதும் செயலாளர். அவரை இவர் க. க. க. சோமசுந்தரம் என்பார் (கம்பர் கழகம் க. சோமசுந்தரம்). அமரர் கல் கி ஒருமுறை அந்தக் கழகத்தின் தலைவராக இருந்தார். அப்போது கம்பன் விழா இராஜாஜி ஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்தக் காலத்தில் குடியரசுத் தலைவராக இருந்த திரு. இராசேந்திரப்பிரசாத் விழாவைத் திறந்து வைத்தார். இவர் வரவேற்றுப் பேசினார்; அப்போது சொன்னது:

கம்பன் சோழ மன்னர் காலத்தில் வாழ்ந்தவன். ஆனால் சோழ மன்னர் அவனைப் பாராட்டி ஆதரித்ததாகத் தெரிய வில்லை. சடையப்பவள்ளல்;கம்பனை வளர்த்து ஆளாக்கிப் பாடச் செய்தவர். எத்தனையோ கவிஞர்களுக்குச் சிறப் பளித்து வாழ்வளித்த சோழகுலம் கவிச் சக்கரவர்த்தி யாகிய கம்பனைப் பாராட்டத் தவறிவிட்டது. பிற்காலச் சோழ மன்னர்களில் மிகப் புகழ் படைத்தவர் கங்கை, கொண்ட சோழர் என்ற சிறப்பைப் பெற்ற இராசேந்திர சோழ சக்கரவர்த்தி. கம்பனுக்குத் தம் குலம் செய்ய மறந்த சிறப்பைத் தாமாவது செய்யலாம் என்று கருதி அவர் வந்ததுபோல இருக்கிறது, இந்தியச் சக்கர வர்த்தியைப் போன்ற நம் ராஷ்டிரபதி இங்கே எழுந் தருளியது. அந்தச் சோழமன்னரும் இராசேந்திரர். இவரும் இராசேந்திரர் அல்லவா? x -

கடைசிப்பந்தி

- இவரும் இவர் தம்பி ரீ கி. வா. பாலசுப்பிர மணியனும் முன்பு ஒன்றாய் இருந்து வந்தார்கள். அவர் வியாபாரம் செய்கிறார். அவர் கடையில் உள்ள இருவர் இவர் வீட்டிலேயே உண்டு வந்தனர். கடையை மூடிக் கொண்டு வர இரவு 10-30க்கு மேல் ஆகும்.

இவர் வீட்டுக்கு இவருடைய நண்பர் ஒருவர் வெளி யூரிலிருந்து வந்தார். இவரது வீட்டில் தங்கிப் பகலுணவு