பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:கி.வா.ஜ.வின் சிலேடைகள் 83

"குளிர்காலம். ஏதாவது கம்பளிச் சட்டை போட்டுக் கொள்ளுங்கள். அசட்டையாய் இருக்கக் கூடாது. பிறகு ஜலதோஷம், ஜூரம் எல்லாம் வந்து விடும்." (அசட்டை

சட்டையின்றி இருத்தல்; அசிரத்தை கவனக் குறைவு.)

ஐ ய ம்

ஒரு நண்பருடைய வீட்டுக்கு இவர் சென்ற போது அவர் தம் மகளை அறிமுகப்படுத்தி இவரை வணங்கச் சொன்னார்.

'ஜயம்' என்று அவளைத் தந்தையார் அழைத்தார்.

" உன் பெயர் ஜயலக்ஷ்மியா?' என்று இவர் கேட்டார். 'ஆம்; ஜயம் என்று கூப்பிடுவார்கள்' என்றாள் அந்தப்

பெண். . . .

"எங்கே போனாலும் உனக்கு ஜயந்தான். உன்ன்ைக் கல்யாணம் செய்து கொள்கிறவனுக்கும் ஜயமே கிடைக்கும்' என்றார். - -

'நல்ல ஆசீர்வாதம்' என்று பெண்ணின் தந்தையார் மனமகிழ்ந்தார். -