பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கி.வா.ஜ.வின் செய்யுளில் சிலேடை

'இறைவன் பல ஆடைவகைகள் புனைந்திருந்தாலும் அவனைப் புலவர்கள் திகம்பரன் என்றே சொல்லுகிறார்கள்' என்ற க ரு த் து அமையச் சிலேடையாக ஒரு பாடல் பாடினார். -

தலையிலொரு சோமனுளான்;

தங்குகையில் கலையுடையான்; நிலையுடைய வத்திரங்கள்

நீங்கரிய ஐந்துடையான்; விலையுடைய வேட்டியிடை

வித்தகளே ஆயினும் என்? துலையுடைய காவுடையோர்

நக்கனென்றே சொல்லுவரே.

சோமன்-வேட்டி, சந்திரன். கலை-ஆடை, மான். வத்திரங்கள்-வஸ்திரங்கள் (ஆடைகள்), வக்த்ரங்கள் (முகங்கள்): இறைவனுக்குத் தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்தியோஜாதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள் உண்டு. விலை உடைய வேட்டியிடை வித்தகன்-விலைமிக் குடைய வேட்டியை இடையிலே உள்ள பெருமான், மதிப்பையுடைய திருவேட்டி என்னும் தலத்தினிடையே உள்ள பெருமான். துலையுடைய நாவுடையோர்-துலாக் கோலைப் போல நடு நிலையில் நின்று பேசும் நாவையுடைய பெரியவர்கள். நக்கன்-திகம்பரன்.

- "தலையில் முண்டாசு, கையில் அங்க வஸ்திரம், கையிருப்பில் ஐந்து ஆடைகள், இடுப்பில் விலை உயர்ந்த வேட்டி ஆகிய இவ்வளவு இருந்தும், பெரியவர்கள் திகம்பர னென்றே சொல்லுகிறார்களே என்று தொனிக்கப் பாடியது இது.