பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. షేrభ్ర, வின்சிலேட்ைக்ள் 93

நீரிழிவு - ஒரு நோய், கடலில் இறங்கி வாழ்தல். நீடு கழலை உடையான் - நெடு நாட்களாக உள்ள கட்டியை உடையவன். உலகத்தை அளப்பதற்காக நீண்ட திரு வடியை உடையவன். சீ க் கொண்டான் - சீழைக் கொண்டான், திருமகளைக் கொண்டான், சீ - திருமகள். வலிப்பு விக்குளே பொருந்தி மால் ஆனான் - வலிப்பும் விக் கலும் சேர்ந்து மய்க்கம் உடையவனானான்; வலிப் புவிக்குளே பொருந்தி மால் ஆனான் - வன்மிைன்யயுடைய பூமிதேவியி னிடத்தில் ம்னம் பொருந்திக் கர்தலுடையவன் ஆனான்.

வேட்டியிடை வித்தகன்

திருவல்லிக்கேணியில் திருவேட்டீசுவரன் பேட்டை என்ற பகுதி இருக்கிறது. அங்கே திருவேட்டீசுவரன் கோயில் என்ற சிவாலயம் இருக்கிறது. சிவலிங்கத்தில் வெட்டுக் குறி இருக்கிறது. அருச்சுனன் அடித்த வில் தழும்பை நினைப்பூட்டுவது அது. சிவபெருமான் வேடுவனாக எழுந்தருளி அருச்சுனனோடு போராடியபோது அவ ன் அடித்தான். வேடுவ வடிவத்தில் வந்து அடிபட்டவ்ன் என்பதை எ ன் ணி வேட்டீசுவரன் என்ற திருநாம்ம் வழங்குகிறது. வேடு - வேடன். இத்தகைய லிங்கத்தைப் பார்த்தப்பிரகர லிங்கம் என்பார்கள். தீக்காலி வல்ல்ந் திருவேட்டியும்' என்று அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற வேட்டி என்ற வைப்புத்தலம் இது. திருவேட்டீசு வரன் பேட்டையில் பிள்ளையார் கோயில் தெருவில் தியாக ராஜ விலாசத்தில்தான் தமிழ்த் தாத்தா டாக்டர் மகா மகோபாத்தியாய ஐயரவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களிடம் மாணாக்கராக இருந்து கி.வா.ஜ. பாடம் கேட்ட காலத்தில் ஐயரவர்கள் அடிக்கடி சமஸ்யை கொடுத்து இவரைப்பாடச் சொல்வார்கள். அப்படி இவர் பாடிய பாடல்கள் பல. திருவேட்டீசுவரனைப் பற்றியும் பல பாடல்கள் பாடி யிருக்கிறார். -