பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$92 கி.வா. ஜவின் செய்யுளில் சிலேடை

கோயிலில் நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்தது. இவர் அங்கே போயிருந்தார். ஒரு வைணவப் பெரியவரும் அங்கே வந்திருந்தார், இருவரும் பேசிக் கொண்டிருந் தார்கள். காளமேகத்தைப் பற்றிய ேப ச் சு வந்தது. அப்போது இவர் காளமேகத்தின் பாடல் ஒ ன் ைற ச் சொன்னார். . . . . . . - . .

புள்ளிருக்கு வேளுராகிய வைத்தீசுவரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குத் தீராத வின்ை தீர்த்த தம்பிரான் என்று பெயர். அவரைப்பற்றி நிந்தா ஸ்துதியாகக் காளமேகம் பாடியிருக்கிறார். தமக்கும் தம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வந்த நோயைத் தீர்க்கத் தெரியாத இவர் எந்த வினை தீர்க்கப் போகிறார்?' என்ற கருத்துடையது அந்தப் பாட்டு.

வாதக்கா லாம் தமக்கு, மைத்துனர்க்கு நீரிழிவாம்; போதப் பெருவயிறாம் புத்திரருக்கு; ஒதக்கேள்; வந்தவினை தீர்க்க வகையறியா வேளுரார் எந்தவினை தீர்ப்பார் இவர்? κ . - வாதக்கால் - வாயுப்பிடிப்புள்ள கால், காளியோடு நடனவாதம் செய்த கால். மைத்துனர்க்கு - திருமாலுக்கு. நீரிழிவு - நீரிழிவு என்னும் நோய், கடலில் இறங்கியிருக்கும் நிலை; இங்கே பாற்கடலைச் சுட்டியபடி. பெருவயிறுமகோதரம் என்ற நோய் பெரிய வயிறு. புத்திரருக்கு - கணபதிக்கு. . . . . . . . . .

இந்தப் பாட்டை இவர் சொன்னபோது கேட்ட அந்த வைணவர், "எங்கள் பெருமாளுக்கு இப்படி ஒன்றும் இல்லை' என்றார். "இதோ நான் பாடுகிறேன்; இந்தப் பாட்டில் குடும்பத்தையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. நான் பெருமாளுக்கே உள்ள நோய்களைச் சொல்கிறேன்' என்று கூறி ஒரு வெண்பாவைச் சொன்னார்.

நீரிழிவு தான் உள்ளான், டுேகழ லைஉடையான்; சீரிலகு மார்பினின்டச் சீக்கொண்டான்;.ஓரின் - வலிப்புவிக்கு ளேபொருந்தி மாலானான் தானோ நிலைப்புறுநோய் தீர்ப்பான் நினைந்து? -