பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடிைகள் 9芯

சீதா.கல்யாண மண்டபம்

கோபிசெட்டி பாளையத்தில் திரு. தங்கமணி முத்து வேலப்பக் கவுண்டர் என்னும் வள்ளல் "சீதா.கல்யான் மண்டபம் என்ற பெயரில் பெரிய கல்யாண மண்டபம் ஒன்று கட்டியிருக்கிறார். ஒரே சமயத்தில் ஆறு கல்யாணம் கள் நடப்பதற்கு வேண்டிய வசதிகள் அங்கே உள்ளன. கட்டணம் இல்லாமல் வழங்குகிறார். அதைப் பாராட்டிப் பாடல் சொல்ல வேண்டுமென்று திரு. ஜே. சுப்பிரமணிய ஐயர் இவரைக் கேட்டுக் கொண்டார். 'தம் பெயரைச் சொன்னாலே தங்கம் மணி முத்து எல்லாம் வரும் வேலப்பக் கவுண்டர் இதை அமைத்தது வியப்போ?' என்ற கருத்தை வைத்து இவர் உடனே பாடிய பாட்டு : . . . .

கொல்யானை வேந்தர்க்கும் கூடா தெனச்சீதா கல்யாண மண்டபத்தைக்

கட்டுவித்தான்-சொல்வியப்போ தங்கமணி முத்துப்பேர்

சாற்றவரும் வேலப்பன் இங்கிதனைச் செய்தான் எனல்.

மற்றொரு பாட்டு :

தங்கமணி யார்செய்சீ

தாகலி யாணமண்ட பங்கண்டார் கோபியினில்

பண்டைநாள்-பொங்குநகர் மாமிதிலைச் சீதா

மணமண் டபமிதுவே ஆமென்று கின்றுவியப் பார்.

பல நோய்கள் . . . . . . . . . . . இள ைம யிலேயே செய்யுள் இயற்றும் திறமை பெற்றவர் இவர். இவருடைய ஊராகிய மோகனூரில் சிவன்