பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 29、

பருத்திக் குடுக்கையில் பஞ்சை அடைப்பதும் கஷ்டம்: அதிலிருந்து எடுப்பதும் கஷ்டம்: கொஞ்சங் கொஞ்சமாகத், தான் அடைக்க வேண்டும்; அப்படியே சிறிது சிறிதாகவே எடுக்க வேண்டும். பருத்திக் குடுக்கை வாத்தியாரிடத்தில் உள்ள படிப்பும் அந்தப் பஞ்சைப் போன்றதே. அவர் மூளை கொஞ்சங் கொஞ்சமாகவே கல்வியை ஏற்றுக்கொண்டிருக் கும். பாடம் சொல்வித் தரும்போதும் சிறிது சிறிதாகவே சொல்லிக் கொடுப்பார். மாணாக்கனுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தாலும் சரி, அவருடைய ஆமை நடை மாறாது. பழங் காலத்தில் இப்படிச் சில தமிழாசிரியர்கள் இருந்தார்கள். ஏதாவது ஒரு நூலைச் சிரமப்பட்டுக் கொஞ்சங் கொஞ்ச மாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அவர்களிடம் யாரேனும் போய்ப் பத்துப் பாடல்களை ஒருங்கே கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், 'தமிழ் கிள்ளுக் கீரையா? சுலபமாக வாரி இறைக்கக் கடலைச் சுண்டலா? நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டேன். தெரியுமா?" என்று சொல்வார்கள். அவர்கள் கஷ்டப்பட்டதற்கு, மாணாக்கன் எப்படிப் பிணையாவான்?

பருத்திக் குடுக்கையின் இயல்பைச் சொல்லும் சூத்திரம். பின்வருமாறு :

அரிதிற் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு எளிதி வில்லது பருத்திக் குண்டிகை. |அரிதின்-கஷ்டத்தோடு. பெய-செலுத்த. எளிது ஈவு: இல்லது-எளிதிலே கொடுக்கும் இயல்பு இல்லாதது.

முடத்தெங்கு வாத்தியார் ஒரு வகை. கண்ணபிரானைப் பற்றி ஒரு கதை கேட்டிருக்கிறோம். சத்தியபாமைக்காக அப்பெருமான் பாரிஜாத மரம் கொணர்ந்து அத்தேவி வீட்டில் நட்டானாம். அது வளைந்து வளர்ந்து ருக்மிணியின் வீட்டில் பூவை உதிர்த்ததாம். முடத்தெங்கு என்பதற்கு, வளைந்த தென்ன மரம் என்று பொருள். அதுவும் வேர்.