தமிழக முதல்வராக 1938ஆம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த போது, தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டுவந்த அந்தநாள் தொடங்கி, கழகம் மேற்கொண்டு வந்த, வரும், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு கட்டமாக 5-12-86 அன்று, "தேவநாகரி வடிவில் அமைந்த இந்திதான்், இந்தியாவின் ஆட்சிமொழி" என்ற தொடர் அடங்கிய, இந்திய அரசியல் சட்டம் 343|1 பிரிவு நகலைத் தீயிட்டுக் கொளுத்தியதற்காகத் தமிழகத்தில் பல்லாயிரம் கழகத் தோழர்கள், பல்வேறு மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.
அவ்வாறு அடைக்கப்பட்டவர்களுள், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர்களுள், நானும் ஒருவன்; அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர், திரு. V. K. இராஜூ" அவர்களும் ஒருவர். நாங்கள் சிறையில், இருக்கும்போது 22-12-86 இல் நடைபெற்ற சட்டமன்ற நிகழ்ச்சியில், தேசிய அவமதிப்புத் திருத்தச் சட்டப் பிரிவின் கீழ் பேராசிரியர் உள்ளிட்ட பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டனர், அவ்வாறு பதவி இறக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற