பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு.

-ஸ்பெயின்

சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது.

-( ,, )

காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர். -( ,, )

காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும். -ஜெர்மனி

காப்பியும் காதலும் சூடா யிருந்தால்தான் உருசி. -( ,, )

காதல்தான் காதலை வெல்ல முடியும். -( ,, )

காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும். -( ,, )

காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனை. -( ,, )

காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்து விடும். -( ,, )

காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை. -( ,, )

காதலுக்குக் காலம் கிடையாது. -( ,, )

காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும்.

-( ,, )

காதலின் கண்ணுக்கு ரோஜா மலர் தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா. -( ,, )

அழகைக் காதலித்தல் என்பதில்லை, காதலித்ததே அழகாகும். -( ,, )

காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை. -( ,, )

பேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத் தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது. -( ,, )

காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம்தான். -( ,, )

காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர். -( ,, )

சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும். -( ,, )

எல்லா இடங்களிலும் கண்களின் பாஷை ஒன்று தான்.

- இங்கிலாந்து

முத்தங்கள் திறவுகோல்கள். -( ,, )