பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

நீ காலையைக் கண்டிருக்கிறாய், இன்னும் மாலையைக் காண வில்லை . -யூதர்

வாழ்க்கை மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கடன்தான மரணம் என்னும் கடன்காரன் அதைப் பெற்றுக் கொள்ள ஒருநாள் வருவான். -( ,, )

வாழ்க்கை என்பது இடைவிடாத குடிவெறி-மகிழ்ச்சி மறைந்த பின்பும், தலைவலி இருந்துகொண்டேயிருக்கும். -பாரசீகம்

மூச்சு வருவதும் போவதும் தொட்டிலின் ஆட்டம்; முடிவான தூக்கம் வருமுன் எச்சரிக்கையாயிரு.

-( ,, )

வாழ்க்கை ஒரு வெங்காயம், அதை உரிக்கும்பொழுது கண்ணீர் வரும். - ஃபிரான்ஸ்

வாழ்க்கை என்னவென்று நாம் தெரிந்து கொள்ளுமுன், பாதி வாழ்க்கை கழிந்து விடுகின்றது. -( ,, )

வாழ்க்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகின்றது; இரண்டாம் பகுதி முதற் பகுதிக்காக வருந்துவதில் கழிகின்றது. -ஃபிரான்ஸ்

நாம் வருகிறோம், அழுகிறோம், இது தான் வாழ்க்கை ; நாம் அழுகிறோம், போகிறோம், இது தான் மரணம். -( ,, )

நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று நாட்களே மனிதனின் நாட்கள். -( ,, )

மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்குகிறான் .

-ஜெர்மனி

பன்னிரண்டு வயதில் குழந்தைப் பருவத்தைப் புதைக்கிறோம்; பதினெட்டில் வாலிபப் பருவத்தையும், இருபதில் முதற் காதலையும், முப்பதில் மனிதரிடம் கொண்ட நம்பிக்கையையும், அறுபதிலிருந்து சிறிது சிறிதாக ஐம்புலன்களையும் புதைத்து விடுகிறோம். -( ,, )

ஒவ்வொரு மணியும் (நேரமும்) நம்மைக் காயப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது, கடைசி மணி அடித்தவுடன் ஆவி பிரிகின்றது. -( ,, )