பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42
கந்தைக்கும். கண்ணுறங்கள்
கூரைக்கும்-அந்தோ
தொழில்வேண்டு வார்க்குத்
தொழிலில்லை; கல்வி
எழில்வேண்டு வார்கள்
எவர்க்கும்-கழகமுண்டா?
கல்வித் துறைக்குத்தான்
காவிலையாம்! செந்தமிழ்தற்
செல்விக் குரிமைச்
செயலுண்டா?=='எல்லாரும்
ஒன் 'றென்னும் எண்ணம்
உயரவில்லை! ஒற்றுமைதான்
நன்றென்னும் எண்ணம்
நடப்பதுவோ?-இன்று
பெருநிலத்தில் நற்றமிழா
வாழ்வு பிறரால்
அருவருக்க கலானதெனக்
கண்டும்-திருநாட்டில்
சாய்பாபா வாற்பொருளைத்
தட்டிப் பறிப்பதுவும்
மேய்பாபா ஏய்க்கின்ற
மெய்வழியின்-வாய்வலியும்
பண்னும் இவைபோல்
பலப்பலவும் அண்டரே!
உள்னுக்கால் அந்தோ!
உருகாதோ-கல்நெஞ்சம்
எந்த தெறிபற்றி
யாம்ஒழுகல் வேண்டுமெனில்,
அந்த முறையை
அறைகின்றேன்-அந்தமுறை
எல்லார்க்கும் ஒத்துவரும்
மாற்றம் ஒன்றுமில்லை
செல்வம் அதனால்
செழித்துவரும்-கல்வி
குடும்ப விளக்கு