பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48
இன்றுவரைக்கும் பெரியோர்
செத்தவர்கள் எய்துவதாய்ச்
சொன்னவற்றுள் ஒன்றையொன்று
தூற்றுவன்-அன்றியும்
சாக்காடு நெடுந்தூக்கம்
சாக்காடு பேரின்பம்
என்றுநான் சாற்றிடுவேன்
தூக்கம் கெடவைத்
துவில்என்பீர்-வாய்க்கும்நல்
தூக்கத்தை இன்பமென்றீர்
அன்றோ? நெடுந்தூக்கம்
சாக்காடு இன்பம் என்றார்.
அறுசீர் விருந்தம்
தலைவி கூடத்துப் பேச்சு
மாவர சோடிவ் வாறு
வயதானார் பேசும் போது
கூவர சான இல்க்
குயிலினான் கூடந் தன்னில்
பாவர சான தன்வாய்ப்
பைந்தமிழ் படைத்தி ருத்தாள்
ஆர் அரி நென்று காதால்
மலர்க்குழல் அதைடண் கின்றாள்.

  • பெண்கட்குக் கல்வி வேண்டும்.

குடித்தனம் பேணு தற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணு தற்கே!
பெண்கட்குக் கல்வி வேளிடும்.
உலகினைப் பேணு தற்கே!
பெண்கட்டுக் கல்வி வேண்டும்.
கல்விலைப் பேணு தற்கே!
கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம்; அந்தி கத்தில்
புல்விளைத் திடலாம். நல்ல
புதல்வர்கள் வினைநல் இல்லை!
குடும்ப விளக்கு