152
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா, நீ, தாய். இல்லை, தாயினும் சிறந்தவன். ஆனால், நின் கருணையை நான் அனுபவிக்க முடியவில்லையே. நான் மட்டுமா? கோடானுகோடி உயிர்களும் அப்படித்தான் இறைவா, அலமருகின்றன.
இந்த உலகில் என்னை வருத்தும் பசிகள் தீர்ந்தால் அல்லவா, நான் உன்னைத்தேட முடியும், காணமுடியும்.
என்னுடைய அன்றாட வாழ்க்கையே, ஒரே பிரச்சனை. ஏன் இந்த அவலம்? முத்தொழிலுக்கும் உரிய முதல்வா, நீயே என் பிரச்சனைகளைத் தீர்த்து விடக்கூடாதா? இறைவா, இந்தக் கவலை மட்டும் இல்லையானால் நின் புகழைப் பாடிக் கொண்டேயிருப்பேன்.
இறைவா, கருணை பாலித்திடு! சோறும் கூறையும் தா. அன்று ஆரூரருக்குப் பொன்னும் பொருளும் அளித்தனையே. இன்று ஏன் எனக்குத் தரக்கூடாது?
இறைவா, அருள் செய்க!
எனக்கு இந்த வாழ்க்கை அலுத்துவிட்டது. மண்ணில் நிலவும் வேதனைகளை மாற்ற அருள் செய்க! நின் சந்நிதியில் பணி செய்து கிடக்கும் பேற்றினை அருள் செய்க இறைவா, அருள் செய்க!