பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சேக்கிழார், பெரிய புராணம் இயற்றிடத் துணை நின்ற பெருமைக்குரிய மன்னன் அநபாயச் சோழனே.

சோழர் காலத்துத் திருக்கோயில்கள் திருக்கோயில்களாக மட்டுமல்லாமல் சமுதாயப் பணிமனைகளாகவும் விளங்கின என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது.

பாண்டிய மன்னர்களிலும் பலர், சிவநெறியைச் சார்ந்து பணி செய்துள்ளனர். அவருள் மிகச் சிறந்தவன் வரகுண பாண்டியன் என்ற பேரரசன். பட்டினத்தடிகள் வரகுணபாண்டியனைப் ‘பெரிய அன்பின் வரகுண தேவரும்’ என்று பாராட்டுவார். திருவாசகம் தந்த மாணிக்கவாசகர், அரிமர்த்தன பாண்டியப் பேரரசனின் அமைச்சராக விளங்கினார் என்பதும் அறிந்து மகிழத்தக்கது.

தென்காசித் திருக்கோயிலை எடுப்பித்த அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சிவநெறியின் சீலத்திற்கும் பணிவிற்கும் புகழ் பெற்றவன். மாபெரும் கற்றளித் திருக்கோயிலாகிய தென்காசித் திருக்கோயிலை எடுப்பித்த பெரும் புகழுக்குரிய அரசன் அவன்.

சிவநெறியை, திருக்கோயிலை என்றென்றும் அழியாமல் காப்பாற்ற வேண்டுமென்ற ஆராக் காதலில் உந்தப் பெற்றுத் தமிழகத்தின் வருங்காலத் தலைமுறைக்கு எழுதி வைத்த கல்வெட்டு, காலத்தால் அழியாதது: கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்வது. கல்வெட்டைப் படித்து அனுபவியுங்கள் தமிழக வரலாற்றை, சிவநெறியின் சீர்மையை, திருக்கோயில்களை நன்றியுணர்வோடு காக்கும் பணியைத் தொடருங்கள்! இதோ கல்வெட்டு; படித்து உணர்ந்து செயலாற்றி மகிழுங்கள்.

அரிகே சரிமன் பராக்கிரம மாறன் அரன்அருளால்
வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம்