பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

97


“புரட்டாசி, மாசி, ஆடி, மார்கழி யென்னும் இந்நான்கு மாதங்களையும் தீக்ஷைக்காகவெனக் காரணாகமம் விலக்கியிருக்க. இந்நூலாசிரியர் பின்னைய மூன்றையும் ஆகுமெனக் கொண்டு, முன்னையதை தை, ஆவணி, சித்திரையோடு சேர்த்து, ஆகவென விலக்கியது ஆகம பேதத்தாலென வுணர்க.”

13. ஆ) சைவ சமய நெறி பொதுவிலக்கம்

குறள் - 270 - உரை

“சாதகர் தெற்கு நோக்கியும், சமயிகள் வடக்கு நோக்கியும் இருந்து புசிக்க எனச் சிவாகமங்கள் கூறுமென்க. இருக்கும்போது சமானவருணரும், தீக்ஷிதரும் பந்திபாவனருமாகிய சனங்களோடன்றிப் பிறரோடிருக்க லாகாதென்றறிக”

14. ஆகமங்கள் கற்பிதமே அல்ல என்று சிலர் மதம்; அதுவும் கூடாது. அபோத ரூபமாயிருந்தது. சப்த ரூபமானதால், கற்பிதம் என்பது ப்ரத்திக்ஷ்யமாகத் தெரியும் போது; ப்ரத்தியஷ்த்தை மறைப்பது பொய்யறிவாதலால், அவர்கள் மதத்தை யங்கீகரிப்பது அநர்த்தமாகும்.

(சித்தாந்த சாராவளி.) சரியாபாதவியாக்யானம் சூத்-2. உரை பக். 515. (அதந்த சிவாச்சாரியார் உரை)

15. கருவூர்த் தேவர் சி. கே. எஸ். பக். 7.

16. உத்தமராவார் அவர்தமுள்ளும் சிறப்புடைய உத்தமரே நாற்குலத்துள்ளோர்.

(மறைஞான சம்பந்தர்- சைவசமய நெறி, ஆசாரியர் இலக்கணம் குறள். 2.)

இக்குறளுக்கு - யாழ்ப்பாணத்து நல்லூர் நாவலர் பெருமான் உரை விளக்கமும் காண்க.