பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யுணர்வு, பண்பு, மனித நேயம் என்பவற்றிற்குப் பதிலாகப் பணமே ஆட்சி செய்கிறது. நம்முடைய நாடு கருப்புப் பணமுதலைகளின் வசம் சிக்கிக்கொண்டிருக்கிறது; இத்தகைய சமுதாய அமைப்பில் கல்வி, அறிவு, ஆன்மநேயம் ஆகியன எவையும் வளரா! ஆதலால் தீண்டாமை, சாதி வேறுபாடுகளை அகற்ற சமவாய்ப்புச் சமநிலைச் சமுதாயம் காண வேண்டம். சமவாய்ப்புச் சமநிலைச் சமுதாயம் அமைத்திட உடனடியான செயல் திட்டம் தேவை.

1. தீண்டாமையை நேரிடையாகவோ மறைமுகமாகவோ அனுசரிப்பது குற்றம் என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.

தீண்டத்தகாதவர்கள் என்ற தாழ்த்தப்பட்டவர்களும் தங்களுடைய தாழ்வு மனப்பான்மை காரணமாகவோ உயர்வு மனப்பான்மை காரணமாகவோ சமுதாயத்தில் எந்த ஒரு பகுதியிலிருந்தும் ஒதுங்கிவிடக் கூடாது. மற்றவர்களுடன் உரிமைகளும் உறவுகளும் கொண்டாடி மேவிப் பழகவேண்டும். மற்றவர்களும் அது போலவே தாழ்த்தப்பட்டவர்களின் உயிரில், உணர்வில் கலந்து அவர்களிடம் பழகி, உறவுகளைக் கண்டு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2.தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் வீடு கட்டுவது கூடாது. அறவே கூடாது. நடுவூரில் வீடுகள் கட்டித் தரவேண்டும். வீதிகளில் காலியாக இருக்கும் இடங்களில் வீடுகள் கட்ட வேண்டும். வீதிகளும் அழகுறும். மனிதநேய ஒழுக்கங்களைவிட ஒழுங்குமுறையில் வீடு கட்டுதல் பெரிதல்ல.

3. தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப் பள்ளிக்கூடம், தனி மாணவர் விடுதிகள் கூடாது. எல்லா