பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

474

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சராசரி மக்கள் பெற இயலவில்லை. அதனால்தான் எழுத்தறிவு முயற்சியில்கூட, நமது நாடு வெற்றி பெற இயலவில்லை. வசதியுடையோர் தனிக் கல்வி பெறும் அமைப்பு உள்ளவரை புதுமையும் பொதுமையும் மலரா. அனைவருக்கும் சிற்றூர் முதல் பேரூர் வரை - ஒரேமாதிரியான கல்வி வழங்கப் பெறுதல் வேண்டும். இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற்றால் அம்பேத்கார் எண்ணம் நிறைவேறும்.

3. இந்தியப் பெண்களின் நிலையில் அம்பேத்கார் எண்ணியபடி மாற்றம் ஏற்படவில்லை. வரதட்சணைக் கொடுமை வளர்ந்துகொண்டே போகிறது. இதற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பெண், கவர்ச்சிப் பொருளாகவும், அனுபவப் பொருளாகவும், அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வுகள் குறையவில்லை. இன்று பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. பெண்களின் விருப்பம் அறியும் முயற்சி இல்லை. ஒரோ வழ பெண்கள் விருப்பத்தின் வழி நிகழும் காதல் திருமணங்களுக்கு, சமூகம் பெரும்பாலும் தடையாகவே இருக்கிறது. இந்த நிலை மாற, ஆண்களும் பெண்களும் சேர்ந்து பயிலும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மட்டுமே இயங்க வேண்டும். பெண்களுக்கு என்று தனிக் கல்வி நிலையங்கள் அறவே கூடாது. இங்ங்னம் கூட்டுக் கல்வி முறையால் ஒரோ வழி சில தவறுகள் நிகழலாம். அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. பெண்ணடிமைத் தன்மையை நீக்கக் கூட்டுக் கல்வியும் காதல் திருமணங்களுமே வழி செய்யும். இத்தகு நடைமுறைகள் வளர, நிலைபெற பணி செய்வது டாக்டர் அம்பேத்காரைப் போற்றும் சிறந்த செயல்முறையாகும்.