பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உலகு இன்பக் கேணி” என்று
பாரதி பாடிய நேரிய தமிழையும்
“எல்லாருக்கும் உடைமை பொதுவாக் கிடுவோம்!”
என்று புரட்சிக் கவிஞன்பொன் மொழியையும்
வெற்றி மொழிகளாய் விளங்கிடச் செய்வோம்!
கவிதை பாடிடும் கவிஞர்காள்!
போர்மறக் கவிதைகள் புனைந்துபா டுமினே!
வாழ்க, யுகக்கவி பாரதி நாமம்!
வாழ்க, பா வேந்தன் புகழ்நனி வாழ்க!
வாழ்க வையகம் நலமெலாம் வளர்ந்தே!