பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்கலும்

149




பயணத்தைக் குறை! வெளிச்சத்தைக் குறை!
ஆரியக் கூத்து ஆடினாலும்
காரி யத்தில் கண்ணாக இரு!
இனியும் சொல்லாதே செய்!
நாள் தோறும் செய்!
புதியன தொடங்காதே! பழையன போற்று!
என்று தைத்திங்கள் தேவி இயம்பினாள்!
எழுச்சி கிடைத்தது! விழிப்புணர்வு வந்தது!
மூலையில் இருந்த பானையை எடுத்துப்
பொங்கலிட்டுப் படைத்தேன்!
இனி, செயவினை மூச்சினைக் கடமைகளுக்கே
அர்ப்பணிப்பேன் என்றேன்!
நங்கை விடைபெற்றாள்! நான் எழுந்தேனே!