பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


29. விதியே! விதியே!

விதியே! விதியே! உனக்குவமை இல்லை!
ஆயினும்,
உன்னுடைய விளம்பர முகவர்கள்
உன்னை ஆகா ஊஊ என்று
உன் வலிமையைப் பெரிது படுத்துகின்றனர்!
ஆயினும் நின்வலி
அயர்விலா உழைப்புடை யாரிடம் செல்லுமா?
நாளும் தாழ்விலா முயற்சியுடையார் மாட்டு
நின்வலி செல்லு படியா காது!
அயர்வும் சோர்வும் சோம்பலும் உன்முன்
தாளிட்டுப் பணியும்!
விதியே! விதியே! நீ இந்த நாட்டு
மக்களைக் கெடுத்தது, போதாதா?
இன்னமும் ஏன்திருவிளை யாடல்?
வளம் கொழிக்கும் நாட்டில் வறுமை?
உனக்குப் பயந்தோர் சிலர்
உழைப்புத் தேவியைச் சரணடை யாமல்
கண்ட கண்ட தெய்வங் களிடம்
சரணடை கின்றனர்!
விதியே, விதியே போ! போ!'
வந்தால் ஆகூ ழாக வா!
இல்லை யெனில் வேண்டாம்!
துன்பங்களும் துயரங்களும்
சாதனைக் குரிய படிக்கற்கள் எனக்கொண்டேன்!
சுகம் காணும் விழைவு இல்லை!
அறிவறிந்த ஆளுமையே என் செல்வம்!
நாட்டிற்கு உழைத்தலே என்தவம்!