பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

195


30. புத்துயிர்ப்புப் பெறுக!

பாரெலாம் புகழும் வெற்றிகளைப் பெற்றிடுக
முதலில் உன்னை அறிந்து கொள்!
ஓயாது உழைத்திடல் மட்டும் போதாது
சிந்தனை செய், சிந்தனைக்கெனப் பொழுதை ஒதுக்கீடு
செய்க
சிந்தனை தந்த தகுதிசால் முடிவுகளைப் பயன்படுத்து;
எண்ணி எண்ணித் திட்டங்கள் தீட்டுக.
ஐயப்படுக! ஆயினும் வெற்றியை நோக்கியே உழைத்திடுக.
உன்னையே உனது குறிக்கோளினால் அயர்விலாது
அர்ப்பணித்திடுக
இல்லாத பொழுது இல்லையென்று கூறும் துணிவினைப்
பெறுக.
நாளும் தவறுகளைத் திருத்திப் புத்துயிர்ப்புப் பெறுக.
இடறி விழும் பொழுதெல்லாம் எழுந்து
     ஏற்றுத்துடன் பயணத்தைத் தொடங்குக
கடவுளைப் போற்று! மனிதனை நேசி!