இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
202
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஒ, மனிதனே...!
இந்தப் பரந்த உலகம் உன் வசப்பட வேண்டுமா?
அதற்கு ஒரே வழி, உன்னை நீ ஆளுதல்!
ஊரெலாம் அடக்கி ஆள ஆசைப்படுகிறாய்!
ஏன்? உன் நடையைக் கூட முறையாக ஆளுகிறாய்
ஆனால், உன்னை ஆண்டு கொள்வதில்லை!
உன்னை நீயே ஆண்டு கொள்கிறாயா?
பொறிகளின் மீது தனியரசு ஆணை செலுத்தும் நாளே
வாழும் நாள்!
நீ, நீயேயான பிறகு உன் காலம் உன்வசம்
காலந்தொறும் நிற்பாய்
அன்றே உனது வெற்றிகளும் தொடங்குகின்றன!
உனக்கு நீ உரிமையாகிவிடின்
உலகம் உன்னுடையது.