இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாள்வழிக் கவிதைகள் 297
ஞாயிற்றுக்கிழமைகள் மனிதனின் அளவீடு சாதனமே!
மற்ற எல்லாக்கிழமைகளிலும் என்ன செய்தாய்? எப்படி
வாழ்ந்தாய்?
என்பதை - மனித மதிப்பீட்டைச் செய்யும் சாதனம்!
"என்பின்னால் எல்லாருமே வரலாம்!
ஆயினும், எவன் தன்னை மறுத்தவனோ?
சிலுவையைத் தாங்கித், துன்புறத் துணிந்தவனோ?
அவனே என்பின் வருபவன்! என்னைத் தொடர்பவன்”
என்ற
ஏசுமொழி இதயத்தில் தாங்குக!
மதத்தினும் உயர்ந்தது மக்கட்பணி !
கு.XIV.20