பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


        கண்சாடை காட்டுவ தேனோ அறியோம்!
        புலமைப் பித்தனுக்குக் காதற் பித்து.ஏன்?
        காத்து இருந்து கேட்போம் புகழுறு
        வள்ளுவன் றன்னைக் காதலி யாக்கி
        விளையாடு கின்ற விந்தையைத் தானே!

முடிப்பு:

        வள்ளுவன் தன்னைக் காதலி யாக்கிய
        வளமிகு கவிதை கேட்டோம். அடடா!
        வள்ளுவன் வழங்கிய காதல் இன்பம்
        விண்ணும் மண்ணும் கடந்தபே ரின்யம்!
        வள்ளு வனைநாம் எப்படி யேனும்
        பார்க்கலாம் பலர்புகழ் ஞாயிறே போலப்
        பலர்புகழ் அறிவின் ஞாயிறாம் வள்ளுவன்!
        வள்ளுவப் பேரொளி வையக மெங்கணும்
        பரவுக! இடர்கள் நீங்குக! எங்கும்
        இன்பம் தழைத்துஇவ் வுலகம் வாழியவே!