பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



முதலியார், காரைக்குடி மரக்கடை சோமசுந்தரம் பிள்ளை மூவரும் வந்து கந்தசாமித் தம்பிரானைச் சந்தித்தனர். வழக்கம் போல் மறுத்தார் கந்தசாமித் தம்பிரான். ஆனால், அவர்கள் விடவில்லை. அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள "மகாசந்நிதானத்தை அணுகுங்கள். உத்தரவு கொடுத்தால் வருகிறேன்!” என்றார் கந்தசாமித் தம்பிரான். அவர்கள் மகாசந்நிதானத்தைச் சந்தித்துக் கேட்கிறார்கள். மகாசந்நிதானம், கந்தசாமித் தம்பிரான் கருத்தறியாமலேயே மறுத்துவிட்டார்கள்.

பின், குன்றக்குடி ஆதீனத்தார் திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து தம்பிரான் ஒருவரை அழைத்து வந்து வைத்திருந்தார்கள். மூன்று மாத கால அளவில் குன்றக்குடி ஆதீனம் மகா சந்நிதானத்துக்குப் பிடிக்காமல் அவர் திரும்ப அனுப்பப் பட்டார். மறுபடியும் குன்றக்குடி ஆதீனத்தார் தருமபுர ஆதீனத்துக்குப் படையெடுத்தனர். இந்தத் தட்வை என்ன காரணம் பற்றியோ திருமடத்து மரபுப்படி பரிவட்டங் களுடன் தம்பிரான், ஒதுவார் ஆகியோரும் வந்திருந்தனர். இரவு ஏழு மணிக்கு மகா சந்நிதானத்தைக் கண்டு கொள்கின்றனர். குன்றக்குடி ஆதீனத்தில் கும்பகோணம் மடத்திலிருந்த கைலாசத் தம்பிரான் என்பவர் வந்திருந்தார். இவர் வயதானவர். நன்றாக வாதம் பண்ணுவார். குன்றக்குடி ஆதீனத்தின் வழக்குகளைக் கவனமுடன் நடத்தியவர்.

இவர் மகாசந்நிதானத்தைக் கண்டு கொண்டபோது நிலமிசை வீழ்ந்து வணங்கியவர் எழுந்திருக்கவே இல்லை. அழுகிறார்! “குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தைக் காப்பாற்ற வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே அழுகிறார். "மகாசந்நிதானம் சரி என்று சொன்னால்தான் எழுந்திருப்பேன்" என்கிறார்.

மகாசந்நிதானத்துக்கு அறச் சங்கடம்! கந்தசாமித் தம்பிரானை அழைத்து விருப்பம் கேட்கிறார்கள், கந்தசாமித்