பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அருகில் நின்ற ஏவலர் சின்னச்சாமி பிள்ளையிடம் சில அலுவலர்களை அழைத்து வரும்படி உத்தரவு செய்தார். அவர்களும் வந்தனர். ஒவ்வொருவரும் 'அவர் சொன்னார்! இவர் சொன்னார்!’ என்றார்களே தவிர, நிரூபணம் செய்ய வில்லை. மகாசந்நிதானம் மிகவும் வருத்தப்பட்டார். நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொண்டார். கோள் சொல்லிய இருவரை உடனே பணியிலிருந்து நிறுத்தினார். நாம் பரிந்துரை செய்து. திரும்ப அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

மகாசந்நிதானத்துக்கு உண்மை அறியப்போதிய வாய்ப்பில்லை, முதுமை, அதோடு பணம் கிடைத்தால் சரி. பல பொருட்கள் பயனற்றவை விற்பனையாயின. ஒருநாள் "குன்றக்குடிக் கீழ்க்கோயிலில் பாத்திரங்கள் விற்க எடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சிலர் என்ற செய்தி கிடைத்தது. உடனே நாம் மடத்து முகுப்பு வழியாகப் புறப்பட்டுப் பக்கத்திலுள்ள சரவணப்பொய்கைச் சந்து வழியாகக் கீழ்க்கோயிலுக்கு ஒட்டமும் நடையுமாகச் சென்றோம். பாத்திரங்களை எடை போட்டுக் கொண்டிருந்தனர். எல்லாம் புதுப் பாத்திரங்கள்! நாம் கடுமையாகப் பேசிவிட்டு. பாத்திரங்களை அறைக்குள் அள்ளிப் போட்டுப் பூட்டினோம். இதுபற்றி அன்றுமாலை மகாசந்நிதானத்திடம் விண்ணப்பித்துக் கொண்டோம்! பாத்திரங்கள் மகாசந்நிதானத்தின் முன்கொண்டுவந்து பரப்பப்பட்டன.

19

காசந்நிதானம், வந்து பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் பார்த்தார்கள். எல்லாம் புதியனவாக அல்லவா உள்ளன! பழையவை ஒன்றுக்கும் ஆகாதவை என்றல்லவா கூறினார்கள் என்று வருத்தப்பட்டார்கள். இதற்குக் காரணமாக இருந்த அலுவலரைக் கடிந்து கொண்டார்கள்.