பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கொடுப்பதுபோல, நமது அருளாளர்களும், ஞானியர்களும் நமக்களித்திருக்கிற அருட்பாடல்களையும் அறவுரைகளையும் நமது பரம்பரைக்கு நாம் பத்திரம் செய்து கொடுத்துப் படிக்கச் செய்து சொந்தமாக்கிக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

* * *

கரித்துண்டை என்னதான் பாலூற்றிக் கழுவினாலும் கரித்துண்டு பாலின் நிறத்தைப் பெறாதது போல, எட்டிக் காயை என்னதான் தேனில் ஊறப்போட்டாலும் எட்டிக்காய் தேனின் இன்சுவையைப் பெறாதது போல, கீழ்மைக் குணம் படைத்த கயவர்களை எவ்வளவுதான் திருத்த முயற்சித் தாலும் அவர்கள் திருந்தி நல்லவர்களாக மாட்டார்கள். மாறாகக் கரித்துண்டு பாலைத் தன் நிறத்திற்கு மாற்றி விடுவது போல, கீழ்மைக் குணம் படைத்த கயவர்கள் நல்லவர்களையும் கெடுத்து விடுவார்கள்.

* * *

உரிமையைக் கடமையாகச் செய்தால்தான் உரிமை சிறக்கும். உரிமை மட்டும் இருந்து கடமை சிறக்கவில்லை யானால் அந்த உரிமையும் சிறப்பிழக்கும். பயிரைப் பாதுகாக்க வேலி இருப்பது போல உரிமையைப் பாதுகாக்க கடமை இருக்கிறது.

* * *

நாள்தோறும் உடலில் சேரும் அழுக்கைக் குளிப்ப்தன் மூலம், தூய்மைப் படுத்திக் கொள்வது போல, நாள்தோறும் உடையில் சேரும் அழுக்கை துவைப்பதன் மூலம் தூய்மைப் படுத்திக் கொள்வது போல, நாள்தோறும் உள்ளத்தே எழும் துன்பங்களையும் இறைவனை நோக்கி அழுவதன் மூலம் போக்கித் துய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அழுகை இதயத்திலிருந்து பொங்கி வர வேண்டும். அதுதான்