பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

497


அப்பரடிகள் "பார்வாழத் திருவீதிப் பணி செய்தார்" என எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார்.

ஆலயங்களின் தூய்மையைப் பராமரிக்க வேண்டியதன் இன்றியமையாமையைத் தெரிவித்து, அண்மையில் அறநிலையத் துறையின் சார்பில் திருக்கோயில் தூய்மைப் பராமரிப்புப் பணி, மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தொடங்கி வைக்கப் பெற்றது.

பதினைந்து சமூக அமைப்பைச் சார்ந்த அன்பர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தூய்மை பராமரிப்புக்கும், பொறுப்பேற்றுக் கொண்டு, செயல்படத் துவங்கியுள்ளார்கள்.

அனைத்து ஆலயங்களிலும் சமூக நல அமைப்புகளைக் கொண்டு ஆலயங்களின் தூய்மையைப் பராமரிக்க, அறநிலையத் துறை எண்ணி வருகிறது.

அரசின் முயற்சிகளுக்கு, ஆக்கமும் ஊக்கமும் தருவதைப் போல அடிகளார், ஆலயத்தூய்மைப் பராமரிப்பு யாரோ சிலரின் கடமையல்ல ஆலயத் தூய்மைப் பணிகள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கடமையென்பதை இந்நூலில் தெளிவு படுத்தியிருப்பதைப் பாராட்டுகிறேன்.

தமிழ் அருச்சனையின் ஏற்றம் பற்றியும் பல பிரார்த்தனைகள் விளக்குகின்றன. இறைவன் படிக்காசு கொடுத்து பைந்தமிழைக் கேட்டான்; பண் சுமந்த பாடல்களைப் பெறு வதற்காக வைகை ஆற்றங்கரையில் மண்சுமந்தான், சுந்தரரின் செந்தமிழுக்காக திருவாரூர்த் தெருக்களில் நடந்தான்.

ஆகவே இறைவன் தமிழையே விரும்புகின்றான். இல்லை, இல்லை, இறைவன் தமிழாகவே இலங்குகின்றான் எனக்கூறி, "இறைவா! எங்கள் தவறை மன்னித்து அருள், நாங்கள் நல்ல தமிழில் வழிபாடு செய்கிறோம்!” என்று பிரார்த்திப்பதாக அடிகளார் அமைத்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.