இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மண்ணும் மனிதர்களும்
65
ஆனால், இன்று நாம் அனுபவிப்பது ஆனந்த சுதந்திரம்தானா? சுதந்திரம் ஆனந்த சுதந்திரமாக நாம் என்ன செய்ய வேண்டும்? இவற்றையெல்லாம் உபதேசங்களாக எழுத எண்ணம் இல்லை; நிகழ்வுகளின் போக்கிலேயே விளக்கலாம் என்று எண்ணம். திருக்குறள் வழிகாட்டட்டும்.
எல்லாவற்றையும் 'ஆனந்த விகடன்' வாசகர்களுடன் கலந்து சிந்திக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!
இன்ப அன்பு...
அடிகளார்
(92-ஆம் ஆண்டு 'ஆனந்த விகடன்' இதழில் அடிகளார் அவர்களின் 'மண்ணும் மனிதர்களும்' தொடர் ஆரம்பமாவதற்கு முதல் வாரம் எழுதப்பட்ட முத்தான முகவுரை இது.)