பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



“என்னுடன் ஒத்த தருமத்தை யேற்றார்
இயைந்த இவ்வாலிபர் சபைக்கே
தன்னுடல் பொருளும், ஆவியுமெல்லாம்
தத்தமாய் வழங்கினேன்”

என்று நமக்கெல்லாம் அறிவுறுத்துகிறார். ஒரு தலைவன் சர்வாதிகார மனப்பான்மையின்றித் தன்னுடன் உழைப்போர் மனமறிந்து ஒற்றுமைப்பட்டு தான் என்றும் ஊழியனே என்ற பணியுணர்ச்சியோடு பணி செய்ய வேண்டும். அயர்ச்சி தளர்ச்சியுமற்றவனாய் அப்பணியின்றி, வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடா ஏகாக்கிரக சித்தமுடையவனாக நிற்க வேண்டும். அதில் எவ்வாறாலும் தவற மாட்டேன் என்ற சங்கல்பத்தைத் திரிகரண சுத்தியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இலட்சிய வெறியைப் பின்வரும் இரண்டு பாடல்கள் மூலம் பாரதி காட்டுகிறார்.

"இவருடன் யானுமிணங்கியே யென்றும்
இது அலாற் பிறதொழில் இலனாய்த்
தவற்று முயற்சி செய்திடக் கடவேன்
சந்ததமும் சொல்லினால் எழுத்தால்,
அவமற செய்கை யதனினால்
இயலும் அளவெலாம், எம்மவரிந்த
நலமுறு சபையினொரு பெருங்கருத்தை
நன்கிதன் அறிந்திடப் புரிவேன்"

"இன்றும், எந்நாளும் இவை செய்யத்
தவறேன் மெய்யிது, மெய்யிது, இவற்றை
என்றுமே தவறிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக,
அன்றியும் மக்கள் வெறுத்தெனை யிகழ்க
அசத்தியப் பாதகஞ் சூழ்க
நின்ற தீயெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம் யான் உழலுக மன்னோ”