பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தளர்ச்சியுமற்றவனாய் அப்பணியின்றி, வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடா ஏகாக்கிரக சித்தமுடையவனாக நிற்க வேண்டும். அதில் எவ்வாற்றாலும் தவறமாட்டேன் என்ற சங்கல்பத்தை திரிகரண சுத்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த இலட்சிய வெறியைப் பின்வரும் இரண்டு பாடல்கள் மூலம் பாரதி காட்டுகின்றார்.


"இவருடன் யானுமிணங்கியே யென்றும்
இது அலாற் பிறதொழில் இவனாய்த்
தவற்று முயற்சி செய்திடக் கடவேன்
சந்ததமும் சொல்வினால் எழுத்தால்,
அவமற செய்கை யதனினால்
இயலும் அளவெலாம், எம்மவரிந்த
நலமுறு சபையினொரு பெருங்கருத்தை
நன்கிதின் அறிந்திடப் புரிவேன்"


"இன்றும், எந்நாளும் இவை செயத்
தவறேன் மெய்யிது, மெய்யிது, இவற்றை
என்றுமே தவறிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக,
அன்றியும் மக்கள் வெறுத்தெனை யிகழ்க
அசத்தியப் பாதகஞ் சூழ்க
நின்ற தீயெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம் யான் உழலுக மன்னோ”


இவை ஏதோ மாஜினி எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை யையுமே அறிவிக்கும் சாதாரண ஒரு செய்தியன்று. பாரதியும் வெறும் பத்திரிகை நிருபர் அல்லர். ஆனால் மக்களைத் தலைமை தாங்கி இட்டுச் செல்லும் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களையும் அவர்கள் கொள்ள வேண்டிய பிரதிக்ஞையையுமே இதன் மூலம் செம்மையாக அறிவுறுத்து-