பாரதிதாசனின் உலகம்
357
பாரதிதாசனின் உலகம்
357
"இல்லென்று இரப்போர்க்கு இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்”
என்பது அகநானூறு. புறநானூறு,
"தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர்...."
என்று கூறும்
நமது கவிஞன் பாவேந்தன் பொதுநலம் பற்றி நிறையப் பேசுகிறான்.
"அதிகாலை தொடங்கிநாய இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்ப தல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?
என இடித்துரைக்கும் வகையில் பாடுவான். நல்லறமே நாட்டிற்கு இசைந்தது. எந்நாளும் பிறர்க்குத் தீமை செய்யாமை நல்லறம் ஆகும்.
"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்"
என்பது திருக்குறள். தீமை, செய்வானுக்கும் செய்யப் படுபவனுக்கும் தீமை பயக்கும்.
"நல்லது செய்தல் ஆற்றி ராயினும்
அல்லது செய்தல் ஒம்புமின்
என்பது புறநானூறு.
தீமை செய்யாமையும் நன்றி மறவாமையுமே நல்லற மாகும்.
"இந்நாட்டின் நலனுக் காக
நல்லறம் இயற்றி வந்தோம்
எந்நாளும் பிறர்க்குத் தீமை