பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

471


"காசு தந்தால்தான் உன்னைக்
காணும் வழி காட்டுவதாய்
கதவு போட்டு பூட்டு வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா?”

(பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 23)

என்று சாடுவதை எண்ணுங்கள்.

நமது சமுதாயத்தில் ஒரு காலத்தில் கடவுளும் கடவுளின் திருக்கோயில்களும் அதாவது, ஆலயங்களும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன. சமுதாயத்தின் மையமாகவே ஆலயங்கள் விளங்கின. குடிகளுக்கு நலம் செய்யும் மையங்களாக ஆலயங்கள் விளங்கின.

ஆலயங்களைத் தழுவி மக்கள் வாழ்ந்தனர். இது. நமது பழைய வரலாறு; பழைய நாகரிகம். 'கறையான் புற்றில் கருநாகம் புகுந்ததுபோல' நமது திருக்கோயில்களில் - நாமெடுத்த திருக்கோயில்களில், இடைக்காலத்தில் சாதி ஆதிக்கம் புகுந்தது; சன்மார்க்கம் வெளியேற்றப்பட்டது. உயர்சாதி மனப்பான்மை உடையோர் உள்ளே புகுந்தனர். சாமானியர்கள் வெளியே தள்ளப்பட்டனர்.

ஆலயங்களின் அகன்ற மண்டபங்களில் நடந்த பள்ளிகள், மருத்துவமனைகள் அகற்றப்பட்டன. அந்த மண்டபங்கள் தூங்குமூஞ்சிகளின் மண்டபங்களாக வெளவால்களின் மாளிகைகளாக மாறின.

ஒரு சிறந்த பழந்தமிழ் நாகரிகத்தின் வீழ்ச்சியை எண்ணுங்கள்! இந்தச் சிந்தனையை அறிஞர் அண்ணா நம்மிடத்தில் தோற்றுவிக்கிறார். ஆலயங்களைப் பற்றிப் பேரறிஞர் அண்ணா சொன்னதைக் கேளுங்கள்.

"ஆலயங்கள் கட்ட வேண்டியதுதான் அப்பா! ஆனால், அதன் அமைப்பிலே சில மாறுதல்கள் செய்துவிட வேண்டும். ஆயிரம் கால் மண்டபத்துக்கு ஆரம்ப ஏற்பாடாகிவிட்டது. அது கட்டி முடிக்க இன்னும் கொஞ்சம் வேலைதான் பாக்கி முடிந்த பிறகு, அதனை வெளவால்கள்