பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24


தேடிப் பெறுவதா?


துணையொடு கூடிய வாழ்க்கையே நல்வாழ்க்கை - அன்பு நலங்கனிந்த வாழ்க்கை - அற வாழ்க்கை. உலகியலில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்க்கையில் பல வேறு துணைவர்கள் கிடைக்கின்றார்கள். கொஞ்சநாள் கூடி வாழ்கிறார்கள். பின்னர் பிரிந்து விடுகிறார்கள். சிலர் காரணத்துடன் பிரிவார்கள்-சிலர் காரணமின்றியே பிரிவார்கள்-சிலர் தம் பிரிவுக்குக் கற்பனையாகக் காரணம் காட்டுவார்கள். எப்படியோ இவ்வுலக வாழ்க்கையில், நமக்குக் கிடைத்த துணைவர்களிற் பலர் பிரிந்துவிடுகிறார்கள். தன்னலங்களையும் தடைகளையும் கடந்து பாசத்தோடும் பரிவோடும் துணையாகத் தொடர்ந்து வாழ்ந்தவர்கள் இயற்கை நியதியில்-மரணத்தால் பிரிக்கப்படுகின்றனர். அப் பிரிவினைகளையும் கடந்து உயிரை ஒட்டிச் சென்று மறுமையிலும் உறவு கொள்ளுகின்றவர்களும் உண்டு. அத்தகையேர்ர் கோடியில் ஒருவரே. அத்தகு துணை உலகியலில் கிடைப்பது அருமையிலும் அருமை. அதனாலன்றோ உலகியல் துணைகளைவிட இறைவனைத் துணையாகக் கோடல் சாலச் சிறந்ததெனச் சான்றோர் சொல்லுகின்றனர். இறைவனைத் துணையாகக் கொண்டால்