இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
412
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அத்தகைய சொற்கள் வன்சொற்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்க!
நல்லோர்களுக்கு, தூய மனமுடையோர்களுக்கு உண்மை தான் சொல்லத் தெரியும், புகழத் தெரியாது.
ஆதலால் சொற்களின் மொழிச் சுவையைவிட சொற்களால் விளையும் பயனையே நாடுக! இதுவே நன்னெறி ஆசிரியர் காட்டும் வாழ்க்கை முறை.
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதல் ஒண் கருப்பு
வில்லோன் மலரோ விளம்பு.
என்பது நன்னெறி வாக்கு.