வள்ளலார் நெறி II
439
- “மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது”
என்றும், உரைத்திடும் உரைகள் உணர்வுக்குரியன உய்தியைக் காட்டும் தகையன.
கடவுளைத் தொழுதல்-அனுபவித்தல் என்பது வேறு. கடவுளைப் பற்றிக் கற்ற அளவிலும் கேட்ட அளவிலும் அவற்றை ஒலிக்குப்பையாக்கி வாதப் பிரதிவாதங்கள் செய்து ‘சழக்காடுவது’ என்பது வேறு. முன்னையது ஞான வாழ்க்கை; பின்னையது அவ வாழ்க்கை. இன்று பெருகி வளர்ந்திருப்பது பின்னையதே தவிர, முன்னையது அல்ல. மண்ணால் அமைத்த சாலைகள் என்பதை வாழும் ஊர்களை இணைத்து வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், மனித உயிர்களை-நெஞ்சங்களை இணைத்து ஒருமைப்பாடுடையதாக்கக் கண்ட உயர்சமய நெறிகள் தமது நோக்கில் வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம் கொள்கை குறையுடையதன்று. கொள்கைக்காகத் தோன்றிய நிறுவனங்கள் கொள்கையை மறைத்து மூடிவிட்டு ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டு விட்டதேயாகும். வள்ளற் பெருமான் சமய நெறிகளைக் கடந்த உயிர்க்குலப் பொதுமை நெறி நோக்கியே அவாவுகின்றார்.
“எவ்வுயிரும் பொதுவெனக் கண்டிங்கு
ஆதரித் திடுதல் வேண்டும்...”
என்று ஆணையிடுகின்றார். வள்ளற் பெருமான் ஆன்மநேய ஒருமைப்பாடு கண்டவர். வள்ளற் பெருமான்,
“எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி யுள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த