பக்கம்:குப்பைமேடு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம் 149 கொடுத்தான் வந்து ஒரு முறையாவது பார்த்தானா? கட் டிக் கொடுத்தால் போதும் தட்டிக் கழித்துவிட்டான்; இனி என்ன என்று இருக்கிறான் என்று சொல்ல மாட் டார்களா? அதுமட்டுமல்ல என் மனைவி மரகதம் என் னைச் சும்மா விடுவாளா? இவ்வளவு தூரம் போய் மக ளைப் பார்க்காமல் வர உங்களுக்கு எப்படி மனசு வருது என்று கேட்க மாட்டாளா! அவள் பிடிவாதத்திற்கு நியாயம் இருக்கிறது' என்று பரிந்து பேச ஆரம்பித்தார். அதற்கு விவாகரத்துக் கோர வேண்டுமா? இந்தச் சின்னச் சின்ன குறைகளை அதற்குக் காரணம் காட்ட முடியுமா?" 'பெரிய காரணம் வேண்டுமா? மாப்பிள்ளை அந்த வீட்டு வேலைக்காரியுடன் குளியல் அறையில் களித்துக் கொண்டிருப்பது இவள் பார்க்க நேர்ந்தது, அது அவ ளுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது' என்றார். இது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. இது எனக்குத் தெரியாதே' 'இது எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்' அவர் கள் இதை எல்லாம் சொல்லிக் கொண்டா இருப்பார் கள்' - 'பையனைப் பார்த்தால் அப்படித் தெரியவில் லையே'. "அதை நான் தவறு என்று கூறவில்லை. அது அவன் விருப்பம்; சூழ்நிலை அது; இருபத்து நான்கு மணி நேர மும் கணவனைக் கட்டிக்காக்க முடியுமா? அவளுக்கு இது வேதனை தந்திருக்கிறது; வெளியே காட்டிக் கொள்ள வில்லை'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/151&oldid=806191" இலிருந்து மீள்விக்கப்பட்டது