உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அறிஞர் அண்ணா



உயிரைக் கொல்லும் முன்னம் மலர் என் உயிரைக் கொல்லுமென்று எண்ணினான். "உன் ரோஜா வேறு. இது வேறு" என்று நான் கூறிக்கொண்டே, நெஞ்சுக் குழியில் அதிக பலத்தோடு அழுத்தினேன். கண்கள் மூடிக்கொண்டன, கை தளர்ந்து கீழே தொங்கிற்று, கழுத்து சாயந்தது, சோமு பிணமாகக் கீழே விழுந்தான். பிணத்தை ஹாலிலேயே கிடத்திவிட்டு, நேரே என் அறைக்குச் சென்று, அவ்வப்போது துண்டு துண்டாக எழுதி வைத்திருந்த இந்த என் வரலாற்றை எழுதி முடித்தேன் ஒரு கொலை செய்து விட்டு, இவ்வளவு "பாரதத்தை" எப்படி எழுதினேன் என்று ஆச்சரியப்படுவீர்கள். தங்கை சாந்தாவுக்கு விஷயம் தெரியட்டும் என்றுதான் எழுதினேன். தூக்கு மேடை ஏறப்போகும் நான், என் துயர்மிக்க கதையை தங்கைக்கேனும் கூறாவிட்டால் மனம் துடிக்கும் ஆகவே, நிம்மதியுடன் சாவதற்காகவே இதை எழுதினேன்.

கன்னியாக இருக்கையில் காதல் கொண்டு, அது கனியாததால், வெம்பிய வாழ்வு பெற்று, விதவையாகி, விதவைக் கொடுமையிலிருந்து விடுதலை பெற விபசாரியாகி விபசார வாழக்கையிலே ஆனந்தம் பெற ஆசை நாயகனைப் பெற்று, அவனது துரோகத்தால் துயருற்று, அவனைக் கொன்ற காந்தாவின் கதை இதுவே. போலீசாரிடம் தானே நேரில் சென்று கூறி, கொலையை ஒப்புக கொண்டு, தடுமாற்றமின்றி கோர்ட்டில் நின்று தண்டனை பெற்று, தூக்கு மேடை ஏறி, தன் வாழ்வைத் துண்டித்துக கொண்டாள் காந்தா. போலீசுக்குப் போகும்முன்னம், கருப்புச் சீலையைப் போர்த்திக் கொண்டு, சாந்தாவைக் கண்டு செய்தி ஏதும் பேசாது, "இதோ, இதுதான் உன் காந்தா" என்று கூறி விட்டு — வரலாற்றுக் கட்டை அவளிடம் தந்து போனாள். அந்தக் காட்சியை இன்னும் சாந்தா மறக்கவில்லை எபபடித்தான் மறப்பாள்?

முற்றும்.