பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38 குயிலும்...சாரலும்

வில்லை. முற்பிறப்பில் மாலையிட நினைத்த மணவாளன் என்பதால் மாட்டைக் கிண்டல் செய்ய மனம் வரி வில்லையோ? மாட்டைப் புகழும் மொழிகள் அற்புதமாக அமைந்துள்ளன. கற்பனை மிக நயமாக வெளிப்படுகின்றது.

நந்தியே,
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும்
காந்தமே!
காமனே மாடாகக் காட்சிதரு
மூர்த்தியே!

பூமியிலே மாடுபோற்
பொற்புடைய சாதியுண்டோ?
மானிடரும் தம்முள்
வலிமிகுந்த மைந்தர்தமை
மேனியுறும் காளையென்று
மேம்பாடுறப் புகழ்வார்.

நீள முகமும் நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதிபோற் படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச்சுமையும் வீரத் திருவாலும்
வானத்திடிபோல மா வென் றுறுமுவதும்
ஈனப் பறவை முதுகின்மிசை யேறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும்,பல் :காலம் நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்

இவ்வாறு மாட்டைப் புகழ்ந்துரைத்த குயில், தான் மாட்டுடன் எவ்வாறு கூடி வாழப் போகிறது என்பதைக் கூறுகிறது. அங்கே தான் மானிடரைப் பழிக்கிறது.

மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும்
கூனர்தமை யூர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர், மேனிவிடாய் :எய்தியிருக்கும் இடையினிலே பாவியேன்