பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் பரந்திருந்தது. ஆற்றுக்கு வெகுதூரத்தில் நாய்கள் குரைத்தன.

கரிய பெர்ரி மரங்களையும் நாணல் புதர்களையும் ஆதார்ன் முட்செடிகளையும் கடந்து சென்று - அவள் கூந்தல் கற்றைகள் படிய மணலில் பள்ளம் தோண்டினேன்.

நான் என் - கழுத்துப் பட்டையை உருவினேன். அவள் தன் - ஆடையைக் களைந்தாள். கைத் துப்பாக்கியோடு கூடிய கச்சையை நான் அவிழ்த்தேன். அவள் தன் - நான்கு உள்ளாடைகளையும் உதறினாள்.

குழல் ரோஜாப்பூக்களும் சிப்பிகளும் கூட அவள் மேனியின் பளபளப்புக்குத் தோற்றுவிடும். என் கைபட்டதும் துள்ளும் மீன்களாக அவள் தொடைகள் நழுவி விழுந்தன. அவற்றுள் - ஒரு பாதி தனல்! ஒரு பாதி பணி!

I 3 &