கேள்வி :
கேள்வி :
உங்கள் தகுதிக்குச் சுவரும் சுண்ணாம்பும் தேவைதானா?
அதை ஒரு காரணத்துக்காக எழுதினேன். கவிதை ஒரு வீர வழிபாடு ஆகிவிட்டது. காதல், வீரம், பக்தி என்ற இம்மூன்று பொருளைப் பற்றி எழுதுவதுதான் க வி ைத மரபாகத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. அம்மரபை மட்டந்தட்ட எழுதப்பட்டதுதான் சுவரும் சுண்ணாம்பும். -
கவிதையைப் பற்றி நீங்கள் கடைசியாகக் கூற விரும்புவது என்ன?
ஒரு கவிஞன் எழுதுவதெல்லாமே கவிதையாகி விடுவதில்லை. சிலவே கவிதை அந்தஸ்து பெறு கின்றன; தன் ப ைட ப் பு க் கு க் கவிதை அந்தஸ்தைத் தேடித் தரக் கவிஞன் கடினமாக உழைக்க வேண்டும். மூக்கில் நுழைவதுதான் மூச்சு; முதுகைத் தடவிச் சென்றால் அது காற்றுத்தான்.
சுரதா அரும்பிய நேரம்
தமிழ்க் கவிதையின் உள்ளடக்கத்திலும், உருவத்திலும், உத்தியிலும் பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்தவன்
பாரதி.
பாரதி இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின்
முதற்பாகம். பாரதிதாசன் இரண்டாம் பாகம்; சுரதா மூன்றாம் பாகம்.
38