இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
63
தோட்ட மரங்கள், இலைகளிலே-ஓட்டைத்
துளைகள் போட்டே எழில்கெடுக்கும்
காட்டுப் பூச்சி புழுக்கள்தமை-விழுங்கிக்
காட்டைக் குயிலே காப்பாற்றும்!
பயறும் நெல்லும் தின்பீர்கள்-சுவைப் பழங்கள் பலவும் தின்பீர்கள்
துயரம் நல்கும் புழுக்களையோ-தின்னும்
தொண்டு செய்ய மாட்டீர்கள்!
கம்பளிப் புழுவை உணவாக-உயர்
காட்டுக் கோழி தின்றிடுமோ?
வம்பு பேசும் ஆந்தையுடன்-மற்ற
பறவைக் குலங்கள் தின்றிடுமோ?
கன்னங் கருத்த குயிலன்றோ-அந்தக்
கம்பளிப் புழுவைத் தின்றொழிக்கும் இன்னல் நீங்கிக் காடெல்லாம்-இன்று
இருக்கச் செய்யும் தெரியாதா? நம்காட்டுக்குத் தொண்டு செய்யும்-அந்த நல்ல குயிலைத் தண்டித்தால் தன்பாட்டுக்குப் பழந்தின்னும்-பெருந்
தலைவர்க் கென்ன தண்டனையோ?
உழைத்துப் பிழைக்கும் மரங்கொத்தி-இவ்
உண்மை எடுத்துக் கூறியதும்
அழைத்துக் குயிலைப் பறவையெலாம் அன்பாய்ப் பேசி மகிழ்ந்தனவாம்!