பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

செல்லக் கூடாது என்று எண்ணி அவர் வீட்டுக்குச் சென் றேன். என்னிடம் மிக்க அன்போடு பழகினார். இதற்கு முன் என்னை அவர் தம்பி’ என்று அழைத்ததில்லை. ஆனால் இப்போது தம்பி! தம்பி!” என்று நொடிக்கொரு தரம் அவர் அன்பொழுக அழைத்தார். புதுவையில் இரண்டுநாள் தங்கிச் செல்லுமாறு வற்புறுத்தினார். இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு நானும் இரண்டுநாள் தங்கினேன். அவரு டைய காதற் காப்பியமான எதிர்பாராத முத்தத்தை எடுத்து என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்: படித்துப் பார்த்தேன். திரைப்படத்துக்கு மிகவும் ஏற்ற கதை டி. ஆர். சுந்தரத்தைக் கலந்து கொண்டு உங் களுக்குத் தெரிவிக்கிறேன்’ என்றேன் நான்.

"என்ன நான்கு... ஐந்து ரூபாய் வாங்கித் தருவியா?" என்று கேட்டார்.

"முயற்சிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு எதிர்பாராத முத்தத்தோடு சேலம் திரும்பினேன். சேலம் வந்ததும் அன்றே டி. ஆர். எஸ்ஸைச் சந்தித்து எதிர்பாராத முத்தம் கதையை எடுத்துச் சொன்னேன். கதை அவ ருக்கு மிகவும் பிடித்து விட்டது. ரூ 10,001 கொடுப்ப தாகச் சொன்னார். அப்படத்துக்குப் பாவேந்தரே வந்து

வசனம் எழுதினார். அப்படம் ஒரு திரைக்காவியம்! சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்று! அவர் எழுதிய சுபத்ரா'வின் திரைக்கதை வசனம் புத்தகமாக வெளி வந்து டிமாண்டாக விற்றது. அந்நூலை நான்தான்

எடிட் செய்தேன்.

பாவேந்தர் மாடர்ன் தியேட்டர்ஸில் சுலோசனாவுக்கு வசனம் எழுதிய போது சில சுவையான நிகழ்ச்சிகள் நடை பெற்றன. சுலோசனா இந்திரஜித்தின் மனைவி. அப்போது நடிகர் சின்னப்பா புகழேணியின் உச்சியில் இருந்த நேரம். அவர் நடித்த கண்ணகி, மனோன்மணி ஜகதலப்ரதாபன் போன்ற வெற்றிப் படங்கள் தமிழக